தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

டிசம்பர் 23

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூரில், பிற மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கும்பணிகள் ஜீன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா நகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமுதாயக் கூடத்தில் 22.12.2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யு.புளோரா தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்குத் தமிழக அரசின் மூலம் பாடப்புத்தகம், விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருட்கள், மதிய உணவு, சீருடை, காலணி உள்ளிட்ட இலவச கற்றல் உபகரணங்கள் கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சமூக நலத்துறையின் சார்பில் முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. வடமாநில குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஆதார் மையங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆதார் அட்டை பெற்றுத் தருவதோடு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி மாணவ, மாணவிகளின் வருகை 60 சதவீதம் இருக்கும்பட்சத்தில் மாதம் ரூ.400 ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் வழிகாட்டப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் யு.புளோரா பரிசுகள் வழங்கினார். முடிவில் பாரதியார் பல்கலைக்கழக சமூக பணிஇயல் துறை முதலாம் ஆண்டு மாணவர் மதன்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...