”வாக்காளர் அடையாள அட்டைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை”

கோவை, டிசம்பர் 23

வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் ஈ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக பொதுமக்கள் ரூ.25 மட்டும் செலுத்தினால் போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைப் பெற உரிய கட்டணத்திற்கு மேல் செலுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

யாராவது அதிக பணம் பெறவது தெரியவந்தால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. யாராவது அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்டாலோ, அட்டைபெறுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, பொதுமக்கள் ஈ-சேவை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர்கள், தேர்தல் தனிததுணை வட்டாட்சியர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...