”வாக்காளர் அடையாள அட்டைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை”

கோவை, டிசம்பர் 23

வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் ஈ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக பொதுமக்கள் ரூ.25 மட்டும் செலுத்தினால் போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைப் பெற உரிய கட்டணத்திற்கு மேல் செலுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

யாராவது அதிக பணம் பெறவது தெரியவந்தால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. யாராவது அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்டாலோ, அட்டைபெறுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, பொதுமக்கள் ஈ-சேவை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர்கள், தேர்தல் தனிததுணை வட்டாட்சியர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...