தினமும் தாமதமாக வருவதாக கூறி 5 பேருந்துகளை சிறைபிடித்த கோவை மக்கள்


கோவை, டிசம்பர் 23

அரசுப் பேருந்து தினமும் தாமதமாக வருவதால் சரியான நேரத்திற்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை என்று கூறி 5 பேருந்துகளை வெள்ளலூர் பகுதி பொதுமக்கள் இன்று காலை சிறைபிடித்தனர்.



வெள்ளலூர் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம் பகுதிக்கு செல்வதற்கு 74 இலக்கமிட்ட 6 பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வெள்ளலூர் பகுதிக்கு வருவதில்லை என்றும் இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினமும் தாமதமாகவே செல்லவேண்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலையும் பேருந்து தாமதமாகவே வந்தது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அடுத்தடுத்து வந்த 5 பேருந்துகளையும் சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்களின் இந்த திடீர் பேராட்டத்தால் வெள்ளலூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...