தினமும் தாமதமாக வருவதாக கூறி 5 பேருந்துகளை சிறைபிடித்த கோவை மக்கள்


கோவை, டிசம்பர் 23

அரசுப் பேருந்து தினமும் தாமதமாக வருவதால் சரியான நேரத்திற்கு பள்ளி கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை என்று கூறி 5 பேருந்துகளை வெள்ளலூர் பகுதி பொதுமக்கள் இன்று காலை சிறைபிடித்தனர்.



வெள்ளலூர் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம் பகுதிக்கு செல்வதற்கு 74 இலக்கமிட்ட 6 பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வெள்ளலூர் பகுதிக்கு வருவதில்லை என்றும் இதனால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தினமும் தாமதமாகவே செல்லவேண்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலையும் பேருந்து தாமதமாகவே வந்தது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அடுத்தடுத்து வந்த 5 பேருந்துகளையும் சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்கு சென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்களின் இந்த திடீர் பேராட்டத்தால் வெள்ளலூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...