50 மி.கி. அளவில் இயேசு சிலைகளை உருவாக்கி கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்ற தங்க நகைத்தொழிலாளி

கோவை, டிசம்பர் 23

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.

மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...