கோவை, டிசம்பர் 23
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசியா பாடி பில்டிங் (body building) மற்றும் ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.சி.டி பிசின்ஸ் ஸ்கூல் மாணவர் எம்.விக்னேஷ் என்ற விக் டிசல் (24) மற்றும் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரபாண்டியன் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
டிசம்பர் 17, 19-ம் தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில், 60 கிலோ எடை பிரிவில் எம்.விக்னேஷும், 55 கிலோ எடை பிரிவில் ஆர்.சுந்தரபாண்டியனும் இரண்டாம் இடம்பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியன் பாடி பில்டிங் தலைவர் ஹோமயோன் கோரான், பொதுச் செயலாளர் சுரேஷ் கடம், தமிழ்நாடு பாடி பில்டிங் அசோஷியன் பொதுச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற விக்னேஷ், மிஸ்டர் கே.சி.டி, மிஸ்டர் கோயமுத்தூர், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பதக்கம் வென்ற விக்னேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :- இந்தியாவின் சார்பில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பாகவே கருதுகிறோம். பிற நாட்டு வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டது புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தத் தருணத்தில், எங்களுக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசியா பாடி பில்டிங் (body building) மற்றும் ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.சி.டி பிசின்ஸ் ஸ்கூல் மாணவர் எம்.விக்னேஷ் என்ற விக் டிசல் (24) மற்றும் கோவையைச் சேர்ந்த ஆர். சுந்தரபாண்டியன் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
டிசம்பர் 17, 19-ம் தேதிகளில் பாங்காக்கில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில், 60 கிலோ எடை பிரிவில் எம்.விக்னேஷும், 55 கிலோ எடை பிரிவில் ஆர்.சுந்தரபாண்டியனும் இரண்டாம் இடம்பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியன் பாடி பில்டிங் தலைவர் ஹோமயோன் கோரான், பொதுச் செயலாளர் சுரேஷ் கடம், தமிழ்நாடு பாடி பில்டிங் அசோஷியன் பொதுச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற விக்னேஷ், மிஸ்டர் கே.சி.டி, மிஸ்டர் கோயமுத்தூர், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் தென்னிந்தியா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பதக்கம் வென்ற விக்னேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :- இந்தியாவின் சார்பில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது மிகவும் பெருமைக்குரிய வாய்ப்பாகவே கருதுகிறோம். பிற நாட்டு வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டது புதுமையான அனுபவத்தைக் கொடுத்தது. இந்தத் தருணத்தில், எங்களுக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றனர்.