தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி வெற்றி

கோவை, டிசம்பர் 22

கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை அணியின் கால்பந்து வீரர் யுரோஸ் போலிஜினலுக்கு ரூ.25,000 காசோலையை உள்ளாட்சித்துறை  அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.

இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடைபெற்றது. 

இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய  சென்னை சிட்டி எப்.சி அணி, கிழக்கு வங்காள கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த 'ஐ லீக்' போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடந்த தேசிய அளவிலான கால்பந்து போட்டியை காண ஏராளமான பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி,  எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...