கோவை, டிசம்பர் 22
கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை அணியின் கால்பந்து வீரர் யுரோஸ் போலிஜினலுக்கு ரூ.25,000 காசோலையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.
இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடைபெற்றது.
இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய சென்னை சிட்டி எப்.சி அணி, கிழக்கு வங்காள கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த 'ஐ லீக்' போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடந்த தேசிய அளவிலான கால்பந்து போட்டியை காண ஏராளமான பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கிய தேசிய அளவிலான ”ஐ லீக்” கால்பந்து போட்டியில் அசத்தலாக விளையாடிய சென்னை அணியின் கால்பந்து வீரர் யுரோஸ் போலிஜினலுக்கு ரூ.25,000 காசோலையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வழங்கினார்.
இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்.சி., கிழக்கு வங்காள கால்பந்து அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடைபெற்றது.
இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய சென்னை சிட்டி எப்.சி அணி, கிழக்கு வங்காள கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த 'ஐ லீக்' போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் வரும் மார்ச் வரை தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதற்காக 4.5 கோடி ரூபாய் செலவில், மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடந்த தேசிய அளவிலான கால்பந்து போட்டியை காண ஏராளமான பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், அம்மன் கே. அர்ச்சுணன், வீ.சி ஆறுகுட்டி ஆகியோர் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.