பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

திருப்பூர், டிசம்பர் 22

திருப்பூர் அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் அருகே உள்ளது சோளிபாளையம். இதன் அருகே உள்ள ஆனந்தா அவென் யூ குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதே பகுதியில் குடியிருந்து வருபவர் ராஜேஸ்கண்ணன். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராஜேஸ்கண்ணன் தனது குடும்பதாருடன் நேற்று இரவு 12 மணிக்கு கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு காரில் வந்த இரு நபர்கள் பூட்டியிருந்த ராஜேஸ்கண்ணாவின் முன்புற கேட்டை எட்டி குதித்து உள்ளே சென்று கதவை கம்பியால் உடைத்து வீட்டினுள் சென்று மாடியில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 70 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துவிட்டு காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

 இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த 15 வேலம்பாளையம்  போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த குடியிருப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக காவலாளி பணிக்கு வராததை தெரிந்து கொண்டு திட்டமிட்டே நடைபெற்ற இக்கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...