கோவை, டிசம்பர் 22
பொதுத்துறை வங்கிகள் உள்பட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை சீக்கிரம் எடுத்து விடுங்கள் எனக் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இன்று விளக்கமளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் உள்பட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை சீக்கிரம் எடுத்து விடுங்கள் எனக் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இன்று விளக்கமளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.