நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருச்சி விமான நிலையத்தின் ”மாதிரி கட்டமைப்பு வரைபடம்” ரெடி

டிசம்பர் 22

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.



இந்தியாவில் மிகவும் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான திருச்சி விமான நிலையம், தமிழகத்தில் சென்னை, கோவையைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையம் என்ற தரத்தைப் பெற்றுள்ளது. விமான போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கையாள்வதில் கடும் இட நெருக்கடி காணப்படுகிறது. 



இதனைத்தொடர்ந்து, புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, திட்ட ஆலோசனை குழு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தது. அப்போது அந்தக் குழு, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.897 கோடியில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இறுதி செய்து ஆலோசனை வழங்குவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் தங்களது திட்ட அறிக்கையை இறுதி செய்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடம் வழங்குவார்கள். எனக் கூறியிருந்தது. 



இந்த நிலையில், பாஸ்கல் + வாட்சன் கட்டமைப்பு திட்டமிடும் நிறுவனம், நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. 



அதில், புதிய முனையமானது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பசுமை வளாகமாக அமையும். குறைந்த அளவு மின்சக்தியில் எரியும் எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே அமைக்கப்படும். கழிவு நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும். மின்சார தேவைக்காக புதிய முனைய வளாகத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் 1 அல்லது 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 

மேலும், 2020 ஆம் ஆண்டுக்குள் கட்டமைப்பு பணிகள் நிறைவடையும் என்றும், உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, திருவனந்தபுரம், சவுத்ரி சரன் சிங் சர்வதேச விமானநிலையங்களில் அமைக்கப்பட இருக்கும் புதிய முனையங்களின் மாதிரி கட்டமைப்பு வரைபடமும் வழங்கப்பட்டது. 

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...