நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருச்சி விமான நிலையத்தின் ”மாதிரி கட்டமைப்பு வரைபடம்” ரெடி

டிசம்பர் 22

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.



இந்தியாவில் மிகவும் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான திருச்சி விமான நிலையம், தமிழகத்தில் சென்னை, கோவையைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையம் என்ற தரத்தைப் பெற்றுள்ளது. விமான போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கையாள்வதில் கடும் இட நெருக்கடி காணப்படுகிறது. 



இதனைத்தொடர்ந்து, புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, திட்ட ஆலோசனை குழு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தது. அப்போது அந்தக் குழு, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.897 கோடியில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இறுதி செய்து ஆலோசனை வழங்குவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் தங்களது திட்ட அறிக்கையை இறுதி செய்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடம் வழங்குவார்கள். எனக் கூறியிருந்தது. 



இந்த நிலையில், பாஸ்கல் + வாட்சன் கட்டமைப்பு திட்டமிடும் நிறுவனம், நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. 



அதில், புதிய முனையமானது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பசுமை வளாகமாக அமையும். குறைந்த அளவு மின்சக்தியில் எரியும் எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே அமைக்கப்படும். கழிவு நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும். மின்சார தேவைக்காக புதிய முனைய வளாகத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் 1 அல்லது 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 

மேலும், 2020 ஆம் ஆண்டுக்குள் கட்டமைப்பு பணிகள் நிறைவடையும் என்றும், உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, திருவனந்தபுரம், சவுத்ரி சரன் சிங் சர்வதேச விமானநிலையங்களில் அமைக்கப்பட இருக்கும் புதிய முனையங்களின் மாதிரி கட்டமைப்பு வரைபடமும் வழங்கப்பட்டது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...