தன்னை பத்திரப்படுத்திய தாய் நீங்கள்: கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்

டிசம்பர் 22

அலைவரிசை பயணத்தில் கரையாமல் இருக்கத் தன்னை பனிக்குடத்தில் வைத்துப் பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், திமுக தலைவர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அலைவரிசை பயணத்தில் நான் கரையாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். நன்றி உணர்ச்சியோடு 2ஜி தீர்ப்பினை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன். அலைவரிசை புயலின் கோரத் தாக்குதல் தனி மனிதர்கள் மட்டுமின்றி இயக்கத்தையும் களங்கப்படுத்தியது. பொய்களோடு போராடுவதும் உண்மையை சில நேரங்களில் தேடுவதும் வெவ்வேறானவை. உண்மையை மறைப்பது விதையை மண்ணில் புதைப்பது போன்றது.

தொழில்நுட்ப புரட்சியை குற்றம் எனக் கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தன. அலைவரிசை ஒதுக்கீட்டால் ரூ.1.76 கோடி நட்டம் என்று கூறிய எச்சில் சிந்தனையாளர்களுக்கு என்ன தண்டனை தருவது?. அலைக்கற்றை தாக்குதல் தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை சில ஆதிக்க சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...