தன்னை பத்திரப்படுத்திய தாய் நீங்கள்: கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்

டிசம்பர் 22

அலைவரிசை பயணத்தில் கரையாமல் இருக்கத் தன்னை பனிக்குடத்தில் வைத்துப் பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், திமுக தலைவர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அலைவரிசை பயணத்தில் நான் கரையாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். நன்றி உணர்ச்சியோடு 2ஜி தீர்ப்பினை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன். அலைவரிசை புயலின் கோரத் தாக்குதல் தனி மனிதர்கள் மட்டுமின்றி இயக்கத்தையும் களங்கப்படுத்தியது. பொய்களோடு போராடுவதும் உண்மையை சில நேரங்களில் தேடுவதும் வெவ்வேறானவை. உண்மையை மறைப்பது விதையை மண்ணில் புதைப்பது போன்றது.

தொழில்நுட்ப புரட்சியை குற்றம் எனக் கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தன. அலைவரிசை ஒதுக்கீட்டால் ரூ.1.76 கோடி நட்டம் என்று கூறிய எச்சில் சிந்தனையாளர்களுக்கு என்ன தண்டனை தருவது?. அலைக்கற்றை தாக்குதல் தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை சில ஆதிக்க சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...