கோவை, டிசம்பர் 22
தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர்.
இன்று காலை தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர்.
அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர்.
இன்று காலை தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர்.
அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பான தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.