கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷ வாயு தாக்கியதில் தங்கப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலி

கோவை, டிசம்பர் 22

தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்கப்பட்டறை நடத்தி வருபவர் ரவிசங்கர். 

இன்று காலை தங்கப்பட்டறையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துமாறு ரவிசங்கர் தனது பட்டறை தொழிலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த சூர்யா, ஏழுமலை மற்றும் கவுரி சங்கர் ஆகிய மூன்று பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர். 

அப்போது தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது தொடர்பான தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும், பட்டறை உரிமையாளர் ரவி சங்கர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற வழக்கினை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய பட்டறை தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...