ஈஷா - சோழா கோப்பைக்கான வாலிபால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி சாம்பியன்

கோவை, டிசம்பர் 21

ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் இறுதிச்சுற்றுப் போட்டியில் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிபோட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு நடந்தது. நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு மற்றும் சோழமண்டலம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர்ராவ், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் மோஹித் சவுஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.  



வாலிபால் இறுதி ஆட்டத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் மற்றும் புதுச்சேரி கலிதீர்த்தால் குப்பம் அணிகள் மோதின. இப்போட்டியை சத்குரு பலத்த கரகோஷங்களுக்கிடையே முதல்பந்தை அடித்து போட்டியைத் துவக்கி வைத்தார். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், சிறப்பாக ஆடிய  கோவை நஞ்சுண்டாபுரம் அணி 2-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி மூன்றாவது இடத்தையும், கோபி சாவுகாட்டுப்பாளையம் அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.



இதைத் தொடர்ந்து, த்ரோபால் போட்டியில் கோவை பீளமேடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை கோபிமுருகன் புதூர் அணியும், மூன்றாவது இடத்தைக் கோவை சின்னியம்பாளையம் அணியும், நான்காவது இடத்தை கடலூர் திருச்சோபுரம் அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்குச் சத்குரு மற்றும் பிஎஸ்எஃப்-ன் டிஐஜி (பயிற்சிதுறை) திருகார்க் ஆகியோர் ஈஷா சோழா வெற்றிக் கோப்பையையும் பரிசுத்தொகையும் வழங்கினர்.  இந்தப் போட்டிகளை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் (BSF) போட்டியைக் கண்டுகளித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...