ஈஷா - சோழா கோப்பைக்கான வாலிபால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி சாம்பியன்

கோவை, டிசம்பர் 21

ஈஷா சோழா கோப்பைக்கான வாலிபால் இறுதிச்சுற்றுப் போட்டியில் கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஈஷா அவுட்ரீச் மற்றும் சோழ மண்டலம் குழுமம் இணைந்து நடத்தும் ஈஷா சோழா கோப்பைக்கான இறுதிபோட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க 112 அடி ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு நடந்தது. நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு மற்றும் சோழமண்டலம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுதிர்ராவ், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் மோஹித் சவுஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.  



வாலிபால் இறுதி ஆட்டத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் மற்றும் புதுச்சேரி கலிதீர்த்தால் குப்பம் அணிகள் மோதின. இப்போட்டியை சத்குரு பலத்த கரகோஷங்களுக்கிடையே முதல்பந்தை அடித்து போட்டியைத் துவக்கி வைத்தார். பின்னர், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், சிறப்பாக ஆடிய  கோவை நஞ்சுண்டாபுரம் அணி 2-க்கு 1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி மூன்றாவது இடத்தையும், கோபி சாவுகாட்டுப்பாளையம் அணி நான்காவது இடத்தையும் பிடித்தது.



இதைத் தொடர்ந்து, த்ரோபால் போட்டியில் கோவை பீளமேடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை கோபிமுருகன் புதூர் அணியும், மூன்றாவது இடத்தைக் கோவை சின்னியம்பாளையம் அணியும், நான்காவது இடத்தை கடலூர் திருச்சோபுரம் அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்குச் சத்குரு மற்றும் பிஎஸ்எஃப்-ன் டிஐஜி (பயிற்சிதுறை) திருகார்க் ஆகியோர் ஈஷா சோழா வெற்றிக் கோப்பையையும் பரிசுத்தொகையும் வழங்கினர்.  இந்தப் போட்டிகளை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் (BSF) போட்டியைக் கண்டுகளித்தனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...