'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை'

கோவை, டிசம்பர் 21

'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை. அதனால் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை பற்றி கூட அறியாமல், கருப்பு பணம் ஒழிந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்று மாற்று வளர்ச்சி மையத்தின் நிறுவனர், திரு. ஜெ. ஜெயரஞ்சன் வருத்தப்பட்டார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில், 'பொருளாதார தி்ட்டங்களால் நாம் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா?' என்ற தலைப்பில், பொருளாதரக் கொள்கைகளின் தாக்கம் பற்றிய கருத்தரங்கம் , புதன்கிழமை மாலை நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஜெயரஞ்சன் கூறியதாவது:

அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தினமும் ஒரு பொய்யான புள்ளி விவரங்களை பட்டியலிட்டு அந்த தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்நிலையில், அரசு சேவைகள் அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சென்றடையும். முதலாளித்துவ கொள்கைகள் வெளிப்படையாகவே அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இயற்கை வளமும், மனித வளமும் உலகை கட்டுப்படுத்தும் பெரும் பணக்கார முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநில அரசுகளும், உள்ளூர் முதலாளிகலும் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.



கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய எழுத்தாளர் பாமரன், 'கல்வியின் பெருமை அறிந்த மனிதன், மணலில் எழுதி பழகினான். பின், எழுத்துக்களை அச்சுக்களில் வடித்து வாசித்தான். ஊரில் வாசிக்கத் தெரிந்த ஒரு நபர் முச்சந்தியில் உள்ள விளக்கின் அடியில் அமர்ந்து, ஊர் மக்களுக்கு நாளிதழ்களை வாசித்துகாட்டுவார். இப்பொழுது நாம் நவீன முறைகளில் கல்வி கற்றுகொண்டிருக்கிறோம். இருந்தும், பொருளாதாரம் பற்றிய அறிவு நம்மிடம் மிகக் குறைவு. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கும் பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்கம், தொடர்ந்து நடத்தப்படும்' என்று கூறினார்.



உலகமயமாக்கல் குறித்து உரையாற்றிய பொருளாதார வல்லுநர் செளந்தரன், 'உலகமயமாக்கலால் அதிகம் பயனடைந்தவர்கள் நடுத்தர மக்கள், ஆனால் பொருளாதாரம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என எச்சரித்தார்.



மேலும் அவர் கூறியதாவது, 'அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை தங்களது சந்தைக்கான நாடுகளாக பார்க்கிறது. எல்லா துறைகளிலும் வெளிநாடுகளின் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருத்துவம் மற்றும் உயர்கல்வி சேவைகளை தனியார் வசம் கொடுப்பதால், வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரிக்கும், எனவே பொருளாதாரமும் பொதுமக்களும் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் நிதித் துறையை ஆகிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பெரும் ஆபத்துகளை உணராமல் பொதுமக்கள் உள்ளனர், கப்பல் பாறையை முட்டும் போதுதான் ஆபத்து புரியும்' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற பொருளாதார நிபுனர்களும், பொதுமக்களும், பொருளாதாரம் சார்ந்த தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...