கோவை விமானம் நிலையத்தில் தமிழிசை பேட்டி, ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடாவைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டிருப்பது தெரியாது என தினகரன் நாடகம். விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. என்றார்.
கோவை, டிசம்பர் 21
விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது என அக்காட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடா திகைக்கும் அளவு உள்ளது. காய்கறி மூட்டைகளில் பணம் கொண்டு வரப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை.
தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தினகரனுக்கு தெரியாது என நாடகம் ஆடுகின்றனர். ஊழல் செய்து பணம் கொள்ளையடிப்பதை தடுக்க நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் கெயில் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. நெடுஞ்சாலை ஓரங்களில் இத்திட்டம் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.