2ஜி தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு: சட்ட ஆலோசனையை கேட்டு ஆயத்தமாகும் சி.பி.ஐ.


டிசம்பர் 21

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதேசமயம், சட்ட ஆலோசனையை கேட்டு முடிவை அறிவிக்க உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதனை ஆய்வு செய்து, சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...