2ஜி தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு: சட்ட ஆலோசனையை கேட்டு ஆயத்தமாகும் சி.பி.ஐ.


டிசம்பர் 21

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதேசமயம், சட்ட ஆலோசனையை கேட்டு முடிவை அறிவிக்க உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதனை ஆய்வு செய்து, சட்ட வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...