ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து செய்தியாளரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

சென்னை, டிசம்பர் 21

ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 மணிக்கு மேல் ஜெயலலிதா வீடியோ குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இதனிடையே, ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவைப் பார்வையிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சாதனங்களில் கோளாறு ஏற்படுவது வழக்கம் தான் என்றார்.

மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சவாலாக தேர்தலை நடத்தி வருகிறது. எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ குறித்து முழுமையான விவரங்களை சொல்கிறேன் என்றார் தினகரன்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...