ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து செய்தியாளரை சந்திக்கும் டி.டி.வி.தினகரன்

சென்னை, டிசம்பர் 21

ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 5 மணிக்கு மேல் ஜெயலலிதா வீடியோ குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இதனிடையே, ஆர்.கே நகர் தொகுதியில் வாக்குப்பதிவைப் பார்வையிட்ட டி.டி.வி. தினகரன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சாதனங்களில் கோளாறு ஏற்படுவது வழக்கம் தான் என்றார்.

மேலும், தேர்தலை ரத்து செய்ய பலரும் திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சவாலாக தேர்தலை நடத்தி வருகிறது. எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, வாக்குப்பதிவு முடிந்ததும் மறக்காமல் ஐந்து மணியளவில் பிரின்ஸ் லாட்ஜுக்கு வந்துவிடுங்கள். அந்த வீடியோ குறித்து முழுமையான விவரங்களை சொல்கிறேன் என்றார் தினகரன்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...