பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டம்

கோவை, டிசம்பர் 20

முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். 



மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...