கோவை, டிசம்பர் 20
முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.