பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு போராட்டம்

கோவை, டிசம்பர் 20

முழுநேர அரசு ஊழியராக்குதல், நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழரை மணிநேரத்திற்கு மேலாக, கடந்த 35 ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் அறிவித்ததை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 21 மாதங்களுக்கு ஊதியக்குழு அறிவிப்பின்படி, நிலுவைர்த தொகை வழங்க வேண்டும், சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும், பள்ளிகளில் வழங்குவதுபோல, அங்கன்வாடிகளுக்கும் கோடைவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். 



மாநில செயற்குழு முடிவின்படி, நடைபெற்ற முதலமைச்சரின் கவனஈர்ப்பு மாலைநேர ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்கத்தலைவர் சாந்தி, பொருளாளர் அலமேலுமங்கை, செயலாளர் ஸ்டெல்லா, துணைத்தலைவர்கள் சித்ரா, பூங்கொடி, சரஸால், வேலுமணி மற்றும் இணைச்செயலாளர்கள் சாரதா, பாக்கியம், மாலினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...