மாவோயிஸ்ட் சைனி நீதிமன்றத்தில் ஆஜர்

திருப்பூர், டிசம்பர் 20

திருப்பூரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சைனி நீதிமன்றத்தில் ஆஜர் - கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றம் வழக்கை காலதாமதப்படுத்துவதாக புகார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களான ரூபேக்ஷ், அவரது மனைவி சைனி,மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனூப்,கர்நாடகா  மாநிலத்தை சேர்ந்த வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இயக்கத்தின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரூபேக்ஷ் மற்றும் அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் திருப்பூர் எம்.எஸ், நகரில் தங்கி இருந்த போது முறைகேடாக ஆவணங்களை கொடுத்து சிம்கார்ட் வாங்கி பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து முறைகேடாக சிம்கார்ட் பயன்படுத்தியதாக திருப்பூரில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று கோவை மத்திய சிறையில் இருந்து  சைனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன்   நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சைனி தனது வழக்கை நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்தார்.

  சைனி பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...