புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிசம்பர் 20

பல்நோக்கு பண்ணைக்குட்டை வளர்ப்புத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அளவில் மீன்வளர்ப்புப் பரப்பினை அதிகப்படுத்தவும், மாவட்ட அளவில் மீன் உற்பத்தியை பெருக்கிடவும், உள்ளூர் பொதுமக்களின் மீன் உணவுத் தேவையை நிறைவேற்றிடும் வகையில், பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, பரப்பில் 200 எண்ணம் 2500 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும் மற்றும் ஒருமுறை உள்ளீட்டுச் செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ. 1,28,500-ல் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருடக் குத்தகை ஒப்பந்தமும் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 27.12.2017 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வள உதவி இயக்குநர்,

எண்: 4 எஸ்.வி. காம்ப்லெக்ஸ் 2-ம் தளம், 

வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு,

திண்டல் அஞ்சல், ஈரோடு 638 012.

தொலைபேசி எண்: 0424 2271912.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...