புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிசம்பர் 20

பல்நோக்கு பண்ணைக்குட்டை வளர்ப்புத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அளவில் மீன்வளர்ப்புப் பரப்பினை அதிகப்படுத்தவும், மாவட்ட அளவில் மீன் உற்பத்தியை பெருக்கிடவும், உள்ளூர் பொதுமக்களின் மீன் உணவுத் தேவையை நிறைவேற்றிடும் வகையில், பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, பரப்பில் 200 எண்ணம் 2500 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும் மற்றும் ஒருமுறை உள்ளீட்டுச் செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ. 1,28,500-ல் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருடக் குத்தகை ஒப்பந்தமும் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 27.12.2017 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வள உதவி இயக்குநர்,

எண்: 4 எஸ்.வி. காம்ப்லெக்ஸ் 2-ம் தளம், 

வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு,

திண்டல் அஞ்சல், ஈரோடு 638 012.

தொலைபேசி எண்: 0424 2271912.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...