காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

டிசம்பர் 20

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் வடக்கு எல்லைப் பகுதியின் அருகில் மூன்று ராணுவ வீரர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்குப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு இருந்த 3 வீரர்களும் சிக்கினர். இதனிடையே, அன்றைய தினமே குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கினர்.

இதனைத்தொடர்ந்து, பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் ஒருவர் என். மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர் ஆவார்.

 ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது குறித்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...