காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு

டிசம்பர் 20

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் வடக்கு எல்லைப் பகுதியின் அருகில் மூன்று ராணுவ வீரர்கள் கடந்த டிசம்பர் 13ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்குப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு இருந்த 3 வீரர்களும் சிக்கினர். இதனிடையே, அன்றைய தினமே குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சிக்கினர்.

இதனைத்தொடர்ந்து, பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களில் ஒருவர் என். மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர் ஆவார்.

 ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது குறித்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...