தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் மாணவர்கள்


கோவை, டிசம்பர் 19

கோவை  வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தாததால் மதியம் வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் வங்கி கடன் வாங்கி படிக்க வந்துள்ளோம் இந்நிலையில் முதல் முறை மறு தேர்வு எழுத 1000 ருபாய் இரண்டாம்.முறைக்கு 2000 ஆயிரம் அதையே மூன்றாம் முறையாக எழுத வேண்டியது எனில் 3000 கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இது தங்களை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர். 

தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வாங்கும் நிலையில் தற்போது அரசு கல்லூரி  நிர்வாகமும் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறது எனவும் மாணவர்கள் கூறினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக முதன்மையர் மகிமைராஜா மற்றும் பதிவாளர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பதிவாளர் சுதாகர் கூறுகையில் தேர்வு கட்டணம் 200 ருபாயாக இருபதால்  மாணவர்கள் தேர்வு எழுத வருவதில்லை மேலும் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர்களிடம் கூறாமல் அஜாக்கிரதை போக்குடன் இருப்பதால் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...