தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் மாணவர்கள்


கோவை, டிசம்பர் 19

கோவை  வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தாததால் மதியம் வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் வங்கி கடன் வாங்கி படிக்க வந்துள்ளோம் இந்நிலையில் முதல் முறை மறு தேர்வு எழுத 1000 ருபாய் இரண்டாம்.முறைக்கு 2000 ஆயிரம் அதையே மூன்றாம் முறையாக எழுத வேண்டியது எனில் 3000 கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இது தங்களை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர். 

தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வாங்கும் நிலையில் தற்போது அரசு கல்லூரி  நிர்வாகமும் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறது எனவும் மாணவர்கள் கூறினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக முதன்மையர் மகிமைராஜா மற்றும் பதிவாளர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பதிவாளர் சுதாகர் கூறுகையில் தேர்வு கட்டணம் 200 ருபாயாக இருபதால்  மாணவர்கள் தேர்வு எழுத வருவதில்லை மேலும் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர்களிடம் கூறாமல் அஜாக்கிரதை போக்குடன் இருப்பதால் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...