சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் கோவிலில் குவியும் மக்கள்


கோவை, டிசம்பர் 19

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சனிபகவானுக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.



கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு பிடித்தமான உலோகமான இரும்பில், ஆயிரத்து 500 கிலோ எடையில் 7.5 அடி உயரத்தில், சனிபகவானின் வாகனமான காக்கை 400 கிலோ எடையில் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை முதல் சனிபகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் தங்களது கரங்களால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தனர். 

பீளமேடு, பேரூர் உள்ளிட்ட சனீஸ்வரன் கோவில்களில் பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 20 வகையான அபிஷேகங்களை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். இதைத்தவிர, பிள்ளையார், சிவன், அனுமன் உள்ளிட்ட திருக்கோவில்களிலும் பொதுமக்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...