சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்வைப் புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் : அதிகாரிகள் ஏமாற்றம்

கோவை, டிசம்பர் 18

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததால், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. இதில், சிறுபான்மையினர் துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக விழாவிற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி துவங்கி 1.30 மணிநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் விழாவிற்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர். 

இது குறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்காக சுமார் 2 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், பக்கத்து அறையில் இருந்த அவர் வரத் தாமதப்படுத்தியதால் பொறுமையிழந்து வெளியேறியதாகக் கூறினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பிதழை ஏற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...