கோவை, டிசம்பர் 18
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததால், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. இதில், சிறுபான்மையினர் துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக விழாவிற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி துவங்கி 1.30 மணிநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் விழாவிற்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர்.
இது குறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்காக சுமார் 2 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், பக்கத்து அறையில் இருந்த அவர் வரத் தாமதப்படுத்தியதால் பொறுமையிழந்து வெளியேறியதாகக் கூறினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பிதழை ஏற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததால், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. இதில், சிறுபான்மையினர் துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக விழாவிற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி துவங்கி 1.30 மணிநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் விழாவிற்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர்.
இது குறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்காக சுமார் 2 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், பக்கத்து அறையில் இருந்த அவர் வரத் தாமதப்படுத்தியதால் பொறுமையிழந்து வெளியேறியதாகக் கூறினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பிதழை ஏற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.