நகைக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை : திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவு

கோவை, டிசம்பர் 18

கோவை அருகே 35 சவரன் நகையைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், திருட்டு நகையை வாங்கியவரையும் 2 ஆண்டு சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

மணியகாரம்பாளையம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(49). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வெளியூரில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் உறவினரைக் கடந்த 3.10.2011 அன்று பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் சென்று பார்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இதனிடையே, கடந்த  3.12.2011 அன்று காரைக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 3 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காரைக்குடி போலீசார், கோவை தனிப்படையினருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படையினர் காரைக்குடி சென்று கொள்ளையர்களை கோவை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(30), காரைக்குடி சூடாமணி நகரைச் சேர்ந்த ரகுராமன்(31), அறந்தாங்கியை சேர்ந்த சின்னையா மகன் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. 

மேலும், கோவை மணியகாரம்பாளையத்தில் கொள்ளையடித்த 35 பவுன் நகையைச் சென்னை டி நகரில் உள்ள நகை கடை உரிமையாளர் வினய்குமார்(30) என்பவருக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வினய்குமாரை போலீசார் கைது செய்தனர்

இது தொடர்பான வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே ஜாமீனில் வந்த ராகுராமன் தலைமறைவானார். போலீசார் ரகுராமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ராகுராமன், முத்துக்குமார் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், திருட்டு நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் வினய்குமாருக்கு 2 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விஜயா தீர்ப்பளித்தார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...