கோவை, டிசம்பர் 18
ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கோவை மாவட்டக்குழு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப்புறங்களில் 60 சதவிகிதம் மக்களும், நகரத்தில் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், தற்போது மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த உளுந்தம் பருப்பு விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். மேலும், 20 கிலோ அரசியை 10 முதல் 5 கிலோ எனக் குறைத்து வழங்குகின்றனர். கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு ஒரு கிலோ என்ற முறையிலேயே விநியோகிக்கப்படுகிறது. சர்க்கரை விலை 13.50 ரூபாயில் இருந்து 25 ரூபாய் என உயர்த்தியுள்ளனர். மேலும், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதனால், ரேசன் கடையினை நம்பியிருந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்துப் பொருட்களையும் கடந்த ஆட்சியின் போது விநியோகித்ததைப் போலவே மானிய விலையில் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கோவை மாவட்டக்குழு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப்புறங்களில் 60 சதவிகிதம் மக்களும், நகரத்தில் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், தற்போது மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த உளுந்தம் பருப்பு விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். மேலும், 20 கிலோ அரசியை 10 முதல் 5 கிலோ எனக் குறைத்து வழங்குகின்றனர். கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு ஒரு கிலோ என்ற முறையிலேயே விநியோகிக்கப்படுகிறது. சர்க்கரை விலை 13.50 ரூபாயில் இருந்து 25 ரூபாய் என உயர்த்தியுள்ளனர். மேலும், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதனால், ரேசன் கடையினை நம்பியிருந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்துப் பொருட்களையும் கடந்த ஆட்சியின் போது விநியோகித்ததைப் போலவே மானிய விலையில் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.