கோவை, டிசம்பர் 18
கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 85-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குடிநீர் வைப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைகளைச் சுத்தம் செய்யவும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கூடுதலாக மாநகராட்சி வரி வசூல் செய்வது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற வரி உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 85-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குடிநீர் வைப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைகளைச் சுத்தம் செய்யவும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கூடுதலாக மாநகராட்சி வரி வசூல் செய்வது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற வரி உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.