கோவை மாநகராட்சியின் வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் மனு

கோவை, டிசம்பர் 18

கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 85-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குடிநீர் வைப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைகளைச் சுத்தம் செய்யவும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கூடுதலாக மாநகராட்சி வரி வசூல் செய்வது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைகிறது.  எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற வரி உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...