ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடித்த கோவை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி

கோவை, டிசம்பர் 18

ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு இன்று வெகுமதி வழங்கி கவுரவிக்க உள்ளார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.

கடந்த 10-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் வைத்து வட மாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாநகர போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மாநகர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன. 

இந்த நிலையில், இன்று கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன். 

இதறகாக மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உட்பட 10 போலீசார் நேற்று சென்னை சென்றனர்.

இன்று அவர்களை சந்திக்கும் டி.ஜி.பி. துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி அளிக்க உள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...