கோவை, டிசம்பர் 18
ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு இன்று வெகுமதி வழங்கி கவுரவிக்க உள்ளார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.
கடந்த 10-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் வைத்து வட மாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மாநகர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில், இன்று கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.
இதறகாக மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உட்பட 10 போலீசார் நேற்று சென்னை சென்றனர்.
இன்று அவர்களை சந்திக்கும் டி.ஜி.பி. துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி அளிக்க உள்ளார்.
ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடித்த கோவை மாநகர போலீசாருக்கு இன்று வெகுமதி வழங்கி கவுரவிக்க உள்ளார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.
கடந்த 10-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் வைத்து வட மாநில வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மாநகர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில், இன்று கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கி கவுரவிக்கிறார் தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன்.
இதறகாக மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் உட்பட 10 போலீசார் நேற்று சென்னை சென்றனர்.
இன்று அவர்களை சந்திக்கும் டி.ஜி.பி. துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி அளிக்க உள்ளார்.