தமிழ் அறிஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்

கோவை, டிசம்பர் 17

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 5-ம் ஆண்டு விழா இன்று கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 50௦-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு அவ்மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். அவர் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், ” உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் சிறந்த மொழி, பழமையான மொழி, செம்மொழி தமிழ் தான். பல நாடுகளில் உள்ள தொன்மையான மொழிகள் அழிந்துவிட்டன, அதில் சில நாடுகளில் மட்டுமே தாய் மொழியை மீட்டெடுக்க மக்கள் பாடுபட்டு அவர்களது தாய் மொழியை மீட்டெடுத்துள்ளனர். இதுபோன்ற நிலைமை தமிழுக்கு வந்துவிட கூடாது என்பதற்காக இவ்மையம் உருவாக்கப்பட்டது.

தமிழை காப்பாற்ற தமிழர்கள் முடிந்த வரையில் தங்கள் இல்லங்களில் தமிழ் பேசவேண்டும், குழந்தைகளை தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். சில பள்ளிகூடங்களில் பள்ளி வாளகம் மட்டுமின்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்றால் கூட அங்கேயம் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும்.

தமிழை காக்க தமிழுக்காக பாடுபடும் தமிழ் அறிஞர்களை பாராட்டி ஊக்கம் அளிக்கம் வேண்டும் அதனை இவ்மையம் செய்து வருகிறது,” என்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் கலந்துகொண்டு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ் தாத்த உ.வே.சா தமிழறிஞர் விருது முனைவர் சிலம்பொலி செல்லப்பனாருக்கும், தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணநிலனனுக்கும், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுரைத் தமிழ் தொண்டன் விருது முனைவர் க. மணி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

நீதியரசர் ஆர். மகாதேவன் பேசுகையில், ” அக்காலத்தில் தமிழுக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றப்படவில்லை ஆனால் தற்போது அவர்களை நாம் போற்றுகிறோம். தமிழுக்காக பாடுபடுவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் வாழும் காலத்திலேய போற்ற வேண்டும் அந்த பணியை இவ்மையம் சிறப்பாக செய்துள்ளது,” என்றார்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...