கோவை, டிசம்பர் 16
தமிழகத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட பாஜக குழுவை கலைக்குமாறு கொங்கு மண்டல விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 7 கொங்கு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக பாஜகவால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும், அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இக்கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு இடையூறற்ற பயன்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதைக் கண்டித்தும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவில், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்த்து களஆய்வு மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தப் பிரதமர் உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்று, பெட்ரோலிய நிறுவனங்கள் மேலும் பலகுழாய்களை பதிக்கும் திட்டங்களை இதேபகுதியில் விளைநிலங்களின் வழியாகச் செயல்படுத்த தயாராவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக, குஜராத் மற்றும் வளர்ந்த நாடுகளைப் போன்று பட்டா நிலங்களை மத்திய, மாநில அரசுகள் விலைக்கு வாங்கி அரசு நிலமாக மாற்றியமைத்து, அதன் வழியாக எரிவாயு குழாய்களையும், மின்சார உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய பெட்ரோலியம் மினரல்ஸ் பைப்லைன் திட்டம் 1962-ல் உள்ள பயனாளியின் உரிமை (right of user) என்ற பிரிவையும், உயர்மின் கோபுரங்கள் அமைத்திட 1882 ஆம் ஆண்டு டெலகிராபிக் சட்டத்தில் உள்ள சரியான வழி (right of way) என்ற பிரிவையும் அறவே நீக்கிடவும், கெயில் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட பாஜக குழுவை கலைக்குமாறு கொங்கு மண்டல விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 7 கொங்கு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக பாஜகவால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும், அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

இக்கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு இடையூறற்ற பயன்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதைக் கண்டித்தும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவில், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்த்து களஆய்வு மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தப் பிரதமர் உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்று, பெட்ரோலிய நிறுவனங்கள் மேலும் பலகுழாய்களை பதிக்கும் திட்டங்களை இதேபகுதியில் விளைநிலங்களின் வழியாகச் செயல்படுத்த தயாராவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக, குஜராத் மற்றும் வளர்ந்த நாடுகளைப் போன்று பட்டா நிலங்களை மத்திய, மாநில அரசுகள் விலைக்கு வாங்கி அரசு நிலமாக மாற்றியமைத்து, அதன் வழியாக எரிவாயு குழாய்களையும், மின்சார உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய பெட்ரோலியம் மினரல்ஸ் பைப்லைன் திட்டம் 1962-ல் உள்ள பயனாளியின் உரிமை (right of user) என்ற பிரிவையும், உயர்மின் கோபுரங்கள் அமைத்திட 1882 ஆம் ஆண்டு டெலகிராபிக் சட்டத்தில் உள்ள சரியான வழி (right of way) என்ற பிரிவையும் அறவே நீக்கிடவும், கெயில் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.