கோவை, டிசம்பர் 15
வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் முயற்சியில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கோவையில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தத்தெடுத்து, தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளில், மக்கும் மற்றும் மக்காத என இருவிதமான கழிவுகளை சேமிக்க இரண்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், திடக்கழிவுகளின் மூலம் இயற்கைஎரிவாயுவைத் தயாரிக்கும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளைச் சர்க்கார் சாமக்குளத்தின் பிடிஓ சிவகாமி தொடங்கி வைத்தார்.
வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் முயற்சியில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கோவையில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தத்தெடுத்து, தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளில், மக்கும் மற்றும் மக்காத என இருவிதமான கழிவுகளை சேமிக்க இரண்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், திடக்கழிவுகளின் மூலம் இயற்கைஎரிவாயுவைத் தயாரிக்கும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளைச் சர்க்கார் சாமக்குளத்தின் பிடிஓ சிவகாமி தொடங்கி வைத்தார்.