ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் ”ICICT 17”

கோவை, டிசம்பர் 15

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினியியற்புலத்தின் சார்பாக ”ICICT 17” என்ற சர்வதேச அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்ற இந்தச் சர்வதேச கருத்தரங்கினைக் கல்லூரியின் முதல்வர் & செயலர் கு.கருணாகரன் தொடக்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் இயக்குநர் ஏ. எபினேசர் ஜெயக்குமார் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் அபுபக்கர் முகம்மது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கு.கருணாகரன் கூறுகையில், கணினி என்பது செயற்கை நுண்ணறிவு. இவ்வறிவானது சுற்றுச்சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் செயலாற்றி வெற்றியின் இலக்கை அடைய எடுக்கப்படும் முயற்சி. என்றார். மேலும், அவர் செயற்கை நுண்ணறிவு ஆய்வைத் தற்கால புதிய முறையிலான கணினி ஆய்வுடன் ஒப்பிட்டுப் பேசினார். பாரம்பரிய நம்பிக்கை, கற்பனை, தத்துவம், செயற்கை நுண்ணறிவின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கான நியாயவாதம், சிக்கல் தீர்க்கும் திட்டமிடல், கற்றல், இயற்கை மொழிகள் செயலாக்கம், படைப்பாற்றல் ஆகியவற்றை விளக்கினார். 

சிறப்பு விருந்தினர் தனது உரையில் கணினி சார்ந்த முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக் கூறினார். பொதுவாக மனித இயல்பால் நிகழ்த்தப்படும் சிக்கல், தெளிவான தாக்கம், சிக்கலான இணைப்பு, கணினியின் பரிணாம வளர்ச்சி பற்றிய பல்வேறு கோட்பாடுகளை விளக்கினார். மருத்துவம், வாழ்க்கை அறிவியல், தொடர்புக் கட்டுப்பாட்டு பயன்பாடுகள், பாதுகாப்பு, காப்புரிமை, பொருளாதாரம், நிதிநிலை, பசுமை தொழில்நுட்பம், அரசு, வேளாண்மை, போக்குவரத்து போன்ற துறைகளில் கணினியின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...