அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவேன் : சோனியா காந்தி அறிவிப்பு

டிசம்பர் 15

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், விரைவில் ஓய்வு பெறுவேன் என நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

132 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோனியா தலைவராக உள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகச் சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. இந்த நிலையில் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசைத் தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் சோனியாவிடம் நிர்ப்பந்தமான ஒன்றாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி கடந்த 11-ந்தேதி போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த நிலையில், சோனியா நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் காங்கிரசில் ‘‘காப்பாளர்’’ என்ற புதிய பதவி சோனியாவுக்காக உருவாக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், சோனியா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மனநிலையில் இருப்பது இன்று தெரிய வந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- ஓய்வு மட்டும்தான் இனி என் வேலை. நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. விரைவில் ஓய்வு பெறுவேன்.  இவ்வாறு சோனியா கூறினார்.

நாளை ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்றதும் முழுப் பொறுப்பையும் அவரிடம் சோனியா ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...