ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசின் உத்தரவை ஏற்றது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 15

அரசின் நலத்திட்டங்களைப் பெறவும், மொபைல், பான், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அப்போது, அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே மொபைல், பான், வங்கிகணக்கு, அரசின் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆதார் எண் இல்லாமல் மக்கள் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்கலாம். அதேநேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...