ஹெச். ராஜாவைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

கோவை, டிசம்பர் 15

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஹெச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். 

காந்திபுரம், திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, தமிழகத்தை விட்டே காவி கும்பலை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். மேலும், தரக்குறைவாகப் பேசிய ஹெச். ராஜாவிற்குக் கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர்,  அவரை திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். 

போராட்டத்தின் நடுவே, ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர்,  உருவபொம்மையை போலீஸார் பிடுங்கிச் சென்றனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...