ஆர்.கே.நகரில் டோக்கன் முறையில் குக்கர் விநியோகிப்பதாகப் புகார் : பாத்திரக் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

டிசம்பர் 14 

டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீசார் தனியார் பள்ளிக்கூட பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில் பெட்டி பெட்டியாகக் குக்கர்கள், டிபன்பாக்ஸ் ஆகியவை ஏராளமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அது, கிறிஸ்தவ பள்ளிக்கூட பேருந்து என்பதால் பள்ளி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

அப்போது, கிறிஸ்துமஸ் விழாவுக்காகப் பள்ளி ஆசிரியைகளுக்கு பரிசு கொடுப்பதற்காக குக்கர் வாங்கி வருவதாகவும், அதற்கான இரசீது உள்ளது என்றும் தெரிவித்தனர். எந்தக் கடையில் யார் மூலம் வாங்கி வரப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். அதனைப் போலீசார் சரிபார்த்து உறுதிப்படுத்தினர்.

அரசியல் கட்சியினர் யாரும் புகார் கூறாததால் அந்தப் பேருந்து விடுவிக்கப்பட்டது. காசிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல, ஒரு வேனில் கொண்டு செல்லப்பட்ட 500 குக்கர்கள் பிடிபட்டது. அதுவும், கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பரிசு கொடுக்கக் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்தியதால் போலீசார் அந்த வாகனத்தையும் விடுவித்தனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் குக்கர் ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு இரசீது இருந்தால் மட்டுமே அதை விடுவிக்கின்றனர்.

இந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் இங்குச் சோதனையில் ஈடுபட்டனர்.  உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...