ஆணவ படுகொலைக்கு எதிரான தூக்கு தண்டனை தீர்ப்பை மதிமுக வரவேற்கிறது என வைகோ பேட்டி

கோவை, டிசம்பர் 13

சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதை மதிமுக வரவேற்கிறது என கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கொளத்தூர் நகைக் கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் சென்ற மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மதிமுக எப்போதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆனால், உடுமலை சங்கர் உள்ளிட்ட ஆணவ படுகொலைக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனை மதிமுக வரவேற்கிறது. இதேப்போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு அநீதியே அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே முன்மொழிந்தது போல இவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...