காங்கிரஸ் நிர்வாகி அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாகச் சந்திப்பேன் - கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா பேட்டி

கோவை, டிசம்பர் 12

கோவை காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என மலேசியா நாட்டைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா தெரிவித்துள்ளார். 

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு ஹயாசி - ஹா கராத்தே கழகம் செயல்பட்டு வருகிறது. 1976-ல் சென்னையில் துவங்கப்பட்ட இந்தக் கழகம் தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் 9 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கான இந்திய பொறுப்பாளராக மலேசியா வாழ் தமிழர் டோனி பொன்னையா உள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த டோனி பொன்னையாவின் மீது காசோலை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், தனக்கு திருப்பூரில் அறிமுகமானார். 2002-ம் ஆண்டு அவரை ஹயாசி-ஹா கராத்தே கழக இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டார். 



இந்நிலையில், கோவை கருமத்தம்பட்டியில் தனக்கு, மனோகரன் வங்கி கணக்குத் தொடங்கிக் கொடுத்தார். கராத்தே கழக வளர்ச்சிக்கு தன்னிடம் இருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டபோது ரூ. 2 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தார். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு, பணத்தை ஏமாற்றும் நோக்கில், அவரிடம் கொடுத்து வைத்திருந்த தனது பெயரில் துவங்கப்பட்ட வங்கியின் காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு பணம் எடுக்க முயற்சித்தார். அந்தக் காசோலை, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதனால், அவர் தனது சகோதரர் சந்திரசேகர் மூலம் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகார் குறித்து நீதிபதியிடம் தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்துள்ளேன். மேலும், அகில இந்திய செயலாளர் பதவியில் இருந்து மனோகரன் நீக்கப்பட்ட பின்னரும், போலி கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த புகார் மீது சட்டரீதியாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...