திருப்பூர், டிசம்பர் 12
உடுமலை சங்கர் கொலையினை நியாயப்படுத்தி பேசிய இருவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேரைத் தூக்கிலிட திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் சங்கரின் கொலையினை நியாயப்படுத்தி இருவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அந்த இருவரையும் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.
பின், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டுச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.